Sunday, August 29, 2010

நகரங்களில் தரமான தண்ணீர் இல்லை


பி.பி.சி.யில் வெளிவந்த சித்தி அப்படியே கொடுக்கப் பட்டிருக்கின்றது.

"இந்தியாவில் முதல்தரமான நகரங்கள் என வரையறுக்கப்பட்ட 423 நகரங்களில், வெறும் 39 நகரங்களில் மட்டும்தான், தரமான குடிநீர் கிடைப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 423 முதல் தர நகரங்களிலும் தரமான குடிநீர் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டதாக நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் செளகத் ராய் தெரிவித்துள்ளார்.
 
பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், அதிகபட்சமாக 7 மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டு இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில், சென்னை, டெல்லி உள்பட எந்த ஒரு பெருநகரமும் அந்தத் தேர்வில் வெற்றி பெறவில்லை. டெல்லியைப் பொருத்தவரை, டெல்லி கன்டோன்மென்ட் பகுதிதான் அதில் தேர்ச்சி பெற்றிருக்கிறது. ஆனால், டெல்லியின் பிரதான நகரம் தேர்ச்சி்ப் பட்டியலில் இல்லை. சென்னை நகரம் 4.6 மதிப்பெண்களை மட்டும் பெற்றுள்ளது.
 
நவி மும்பை ஏழுக்கு 4.9 மதிப்பெண்களையும், கிரேட்டர் மும்பை 4.4 மதிப்பெண்களையும் பெற்றிருக்கின்றன. தகவல் தொழில்நுட்பத் தலைநகராகக் கருதப்படும் பெங்களூர், 6 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறது.
 
பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஷிம்லா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்ற மக்களவைத் தொகுதியான ரேபரேலி, இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு, காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஷ்ரீநகர் உள்ளிட்ட பல நகரங்கள், மதிப்பெண் பட்டியலில் வெறும் பூஜ்ஜியத்தில் உள்ளன. அதாவது இந்த நகரங்களில் குடிநீர் குறைந்தபட்சம் கூட பாதுகாப்பானதாக இல்லை என்பதையே அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
 
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, சென்னை மட்டுமன்றி எந்த ஒரு நகரமும், முழுமையான, தரமான குடிநீர் கிடைக்கும் நகரமாகத் தேர்வு பெறவில்லை.
அதிகபட்சமாக, திருநெல்வேலி நகரம் 6.4 மதிப்பெண்களைப் பெற்று, அகில இந்திய வரிசையில் 95வது இடத்தில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த நகருக்குத்தான் முதலிடம். அடுத்ததாக, திருச்சி 5.2 மதிப்பெண்களுடன் மாநிலத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 
ராஜபாளையம், திண்டுக்கல் மதுரை, கும்பகோணம், புதுக்கோட்டை உள்ளிட்ட நகரங்கள் ஐந்து மற்றும் நான்குக்கு இடைப்பட்ட மதிப்பெண்கள் பட்டியல் பெற்ற நகரங்களில் உள்ளன. தொழில் நகரமான கோவை 2.8 மதிப்பெண்களையும் பின்னலாடை நகரமான திருப்பூர் 2.1 திப்பெண்களையும், தஞ்சாவூர் 1.7 மதிப்பெண்களையும் மட்டுமே பெற்றுள்ளன.
புதுச்சேரி நகரம், 3.5 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறது."
நன்றி – பி.பி.சி.

Friday, August 13, 2010

மானுடமும் அதன் பொறுப்பும்

மானுடமும் அதன் பொறுப்பும் -


அமெரிக்காவில் கடற்பரப்பில் எண்ணெய் - மும்பையில் பெற்றோலியம் - ரஷ்யாவில் காட்டுத் தீ - பாகிஸ்தானில் கடும் வெள்ளம் - சீனாவிலும் இப்படி ..... உலகின் பல்வேறு இடங்களில் நடக்கிற நிகழ்வுகளுக்கு நான் என்ன செய்ய முடியும்?  

"எல்லாவற்றிற்கும் நான்தான் பொறுப்பு - கடந்த வரலாற்றிற்கு, எதிர்கால நிகழ்விற்கு எல்லாவற்றிற்குமே நான் பொறுப்பு" - இந்த உலகின் ஒவ்வொரு நிகழ்வும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டது அதன் வழியாய் என்னோடு தொடர்பு கொண்டது - என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தார் ஒரு  ஞானி - 

ஒருவிதத்தில் நானும் இந்த நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் - நடந்ததை மாற்ற முடியாது எனினும் இனிமேல் ஏதாவது செய்ய முடியும்.


அதே ஞானி சிசுகொலை என்பது தவறல்ல என்றபோது - சிசுகொலை செய்யவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறதா அல்லது அதை எதிர்க்கிற பொறுப்பு எனக்கிருக்கிறதா என்று புரியவில்லை. அனைத்தையும் நேசி என்று புல்லையும் பூண்டையும், மண்ணையும் மரத்தையும் நேசிக்க வேண்டிய நான் ஏன்....


இந்த அண்ட சராசரம் அனைத்தும் இங்கு நடக்கிற நிகழ்வு வழியாக தன்னையே அது சரி செய்து கொள்கிறது என்பது உண்மை என்றாலும் கூட- 

போர், அடக்கு முறை, அடிமைத் தனம் இவைகளையெல்லாம் கூட  நாம் இயற்கை தன்னைச் சரி செய்து கொள்கிறது என்று சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. 

சில தத்துவ ஞானிகள், தன்னுணர்வு பெற்ற ஞானிகள் - போர்களைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை செய்வதற்கும் ஒன்றும் இல்லை என்று சொன்னது நமக்குத் தெரியும். "காட்டிற்குள் சென்று ஒரு சிங்கம் மானை வேட்டையாடுவதை படம் பிடிக்கிற ஒருவன் வெறும் பார்வையாளனாய் தான் இருக்கிறேநானே தவிர அவன் எதையும் காப்பாற்றுவது இல்லை என்பது போலத்தான்" என்று சில ஞானிகள் சொல்லுவதில் தவறு இல்லைதான் - 

ஆனால் அதைப்போலவே மனிதனும் அப்படித்தான் - மனிதன் போர் புரிகிற போது நாம் அதைப் பற்றி ஒன்றும் செய்வதற்கில்லை என்று சொல்லுகிற போதுதான் சிக்கலே. எல்லாம் தன்னை சரி செய்து கொள்கிறது என்றால் ஞானம் அடைந்த ஞானிகள் தாங்கள் மட்டுமே ஞானத்தை வைத்துக் கொண்டிருக்கலாமே - "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்று எம் ஞானிகள் சொல்ல வேண்டியதில்லையே! பிற மனிதனை ஞானத்திற்கு இட்டுச் செல்ல வேண்டிய கடமை இருக்கின்றது என்று கருத வேண்டிய தேவை இல்லையே? 


கடவுள் நம்பிக்கையற்ற தத்துவவியலாளர்கள் கூட - மனிதப் பொறுப்புணர்வு பற்றிப் பேசினார்கள். ஆல்பர்ட் கமுஸ் என்ற பிரெஞ்சு எழுத்தாளன் - நான் இறக்கப் போகிறேன், நான் உதவி செய்கிறவர்களும் இறக்கப் போகிறார்கள் என்று தெரிந்தாலும் உதவி செய்வதை நான் நிறுத்த முடியாது என்று சொன்னான் - கடவுள் நம்பிக்கை இல்லாதவன்தான்.


ஸார்த் - (Sartre) என்கிற மற்றொரு பிரெஞ்சு தத்துவவாதி  - நாம் சுதந்திரம் கொண்டவர்கள் நமக்கான பொறுப்பை நாமே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்று அறப் பொறுப்பைப் பற்றி பேசுகிற அவன் அஞ்ஞானி - அதாவது உயர் தத்துவத் தளத்தில் நாம் ஒன்றுமில்லாதவர்கள் தான் என்றாலும் சாமானியத் தளத்தில் மானுட மையம் என்கிற விதத்திலும் அப்படியே இல்லை என்றாலும் சார்தே போன்றோர் பொறுப்பு என்கிற விதத்திலாவது பேசியிருக்கிறார்கள்.அதாவது உயர் தளத்தை பின்னே வைத்து சாமானியத் தளத்தை முன்னே வைத்தார்கள்.



ஆனால் எப்படி ....?- எல்லாம் பிரம்மம் என்று நம்புகிற நமக்கு - இவைகள் நிகழத்தான் வேண்டும் என்று நாம் சொல்லி - நாம் இதைப் பற்றி ஒன்றும் செய்வதற்கு இல்லை என்று சொல்கிற போது - நாம் நமது அறப் பொறுப்பை தட்டித்தானே கழிக்கிறோம்.சிலர் ஞானம் அடையக் கூடத் தகுதி அற்றவர்கள் என்றுதானே பல ஞானிகள் கருதினார்கள் - இதுசாமானியத் தளமா அல்லது தத்துவத் தளமா?


இந்திய தத்துவங்கள் - மிகப் பெரிய பிரபஞ்சத்தின் மானுடனை மையப் படுத்தாத நிலை இருந்தது உண்மை என்பது மட்டுமல்ல அது எல்லாவற்றையும் மையப்படுத்தியது என்பதும் உண்மை. 
அதற்காக அது மானுட விரோதப் போக்கை கொண்டிருந்ததா என்பதெல்லாம் பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட முடியாது. சில ஞானிகள் கொண்டிருந்தார்கள் - சிலரிடம் இல்லை. 

நமது பண்பாட்டுச் சின்னங்களை, குறியீடுகளை காக்கின்ற அவசரத்தில் பல சமயங்களில் நாம் எல்லாவற்றையும் சரி என்றோ நியாயப் படுத்தவோ வேண்டிய அவசியம் இல்லை.
இரண்டு பக்கங்கள் - சாமானியத் தளத்தில் மானுட மையம் என்பதும் உயர் தத்துவத் தளத்தில் மானுடம் தாண்டி அனைத்தையும் மையப்படுத்துதல் என்பது மிகச் சரியான உண்மை.  

ஆனால் பல சமயங்களில் உயர் தளம் என்பது வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ நமது ஞானிகளால் சாமானியத் தளத்தில் பயன் படுத்தப் பட்டிருக்கிறது என்பதையும் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். மானுட அறப் பொறுப்பும் மானுட நேயமும் மிக அதிகமாக நமது மண்ணில் ஞானிகள் நிகழ்த்தியிருக்கின்றனர் - வள்ளலார் போல..  
அதே சமயத்தில் மனிதனை வெறும் ஜடமாக - அடிமையாக - மூடனாக நடத்தியதும் பல ஞானிகள்தான் என்பதையும் மறக்கக் கூடாது. 


எது எப்படி இருந்தாலும் - நாம் இந்தப் பிரபஞ்சத்தின் மையமாக இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி - நமக்கென பொறுப்பும் , நாம் எல்லாவற்றோடும் இணைந்த நிலையில் இருக்கும் நிலை உணர்ந்தால் - நம் அறப் பொறுப்பும் மானுடத்திர்கான பொறுப்பும்  - பிரபஞ்சப் பொறுப்பும்  நன்றாய் உணர்வோம்.
வெறும் மானுட மையம் - மரம் அழிக்கும் இப்பிரபஞ்சம் அழிக்கும் - வெறும் பிரபஞ்ச மையம் மானுடம் அழிக்கும்.


Enhanced by Zemanta

Thursday, July 15, 2010

அன்புக்கு எல்லை இல்லை

மனிதர்கள் அன்பு இல்லை எனலாம்.

விலங்குகள் மிகுந்த அன்போடு இருக்கின்றன...

சிங்கம்...
எம் ஜி ஆர் சிங்கம் புலிகளோடு சண்டை போடும் போதெல்லாம், நாம் அவைகள் எவ்வளவு ஆக்ரோஷம் நிறைந்தவை என்று நினைத்திருப்போம்.

தேவர் படங்கள் வந்தபோதுதான் அவைகளை நிறைய பார்த்தோம்.

இராம் நாராயணன் படங்களை பார்த்தபோது எப்புடி -- கப்சா --- என்று யோசித்திருக்கலாம்.

இதைப் பாருங்கள்:




Sunday, April 25, 2010

APRIL 22 - EARTH DAY

இயற்கையின் அதிசயம்



இது விளம்பரம்தான்.
ஆனாலும் நமக்குத் தேவையானதுதான்...




Sunday, April 18, 2010

சிலி பூகம்பம்

சிலியில் ஏற்பட்ட நிலா அதிர்வால் பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் அதிகரித்திருப்பதாக் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

அதைப் பற்றிய கட்டுரை இது.
வாசிக்க இங்கே சொடுக்கவும்.

எரிமலை ஏன் வெடித்தது


iceland - டில் எரிமலை வெடித்து அது மனிதருக்கு ஆபத்து வருமளவுக்கு புகையைக் கக்கிக் கொண்டிருக்கிறது. சில நாட்களாக விமானப் போக்குவரத்து பதிக்கப் பட்டிருக்கின்றது.

இயற்கை இதற்காகத்தான் செய்கிறது என்று சொல்லவதற்கில்லை என்றாலும் - பூமியின் செய்கைகளுக்கு நாம் செவி மடுப்பது அவசியம்.


வளம்
செறிந்த கவிதையொன்று நான் கண்டேன்.
வாசிக்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்.

Saturday, April 10, 2010

உலகம் வெப்பமாவதைத் தடுக்க கணினி பயன் படுத்துவோர் என்ன செய்யலாம்

பின்வரும் பக்கத்தைப் படிக்கலாம்.

படிக்க இங்கே சொடுக்கவும்.

Friday, April 9, 2010

உலகத்தின் நோக்கம் - 6

உலகத்திற்கு நோக்கம் உண்டா நோக்கம் இல்லையா என்கிற விவாதம் நேற்று இன்று பிறந்ததல்ல. பல நூற்றாண்டுகளாக இருக்கின்ற ஒரு விவாதம்.

நமது கேள்விகள் ஒன்றும் புதியவை அல்ல. எல்லாம் ஏற்கனவே விவாதிக்கப் பட்டவைகள்தான்.

நம் நாக்கு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் பேசும். ஏனெனில், அதை எப்படியும் பயன்படுத்த நமக்குள்ள அறிவு பலம் கொடுக்கிறது.
அதுதான் அறிவின் பலவீனமும்.

அறிவின் வழி எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாது.
ஏதாவது ஒரு இடத்தில் அறிவால் நிரப்பப் பட முடியாத வெற்றிடம் எப்போதும் இருக்கும்.

அதனை வெறும் வெற்றிடம் என்று சொல்பவர்கள் நோக்கம் இல்லை என்கிறார்கள்.
அதனை மிஸ்டரி என்று புரிந்து கொள்கிறவர்கள் ஒரு நோக்கத்தினால் ஒருவனால் படைக்கப் பட்டது என்று சொல்கிறார்கள்.

அந்த நோக்கம் இதுதான் என்று சொல்வதும்
அதை நிறைவேற்றாமல் இருப்பது பாவம் என்று சொல்கிற போதும்,
நோக்கம் கற்பிக்கிறவன் எல்லாவற்றையும் அறிந்தவனாக -
தனது ஆளுமையை அனைவர் மீதும் திணிக்கப் பார்க்கிறான்.

இது மனிதனின் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் - அறிவால் தானே தீர்மானிக்கும் நிலையில் இருக்கும் மனிதனை கட்டுப் படுத்தி சிறுவனாகவே பாவிக்கும் மனநிலை தவறு என்கிற நிலையில் - இது ஒரு கருத்தை மற்றவர் மீது திணிக்கும் மேலாதிக்கம் என்பதனாலும், நோக்கத்தையே மறுக்கும் நிலைக்கு நாம் கொணரப்படுகிறோம்.

இந்த அடிமை நிலையிலிருந்து நான் விடுபட -
நோக்கம் இல்லை என்றும் எல்லாவற்றையும் நமது அறிவால் அறிந்து கொள்ள முடியும் என்கிற எண்ணம் தோன்றுகிறது.
ஆனாலும் எல்லாவற்றையும் அறிவால் விளக்க முடிய வில்லை.

நமது உடலைப் பற்றிய புரிதலும்,
இந்த உலகில் எந்திரத் தனமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகமும்,
பரந்து விரிந்த கடலும்,
விண்ணைத் தொடும் இமய மலையும்,
அங்கிருந்து பார்க்கிறபோது அது கொடுக்கிற பயம் கலந்த வியப்பும்,
நம் உடலோடு உறவாடும் தென்றல் வருடும் சுகமும் -

மெல்லிசை கொடுக்கிற திளைப்பும்,
கவிதை கொடுக்கிற மகிழ்ச்சியும்,
நட்பு கொடுக்கிற ஆனந்தமும்,
அன்பு கொடுக்கிற திருப்தியும்
-------- ........................................................

அறிவால் புரிந்து கொள்ள முடியுமா என்பதுதான் புரியவில்லை.

இயற்கை கொடுக்கிற இன்பத்துக்காகவே நாம் சுற்றுலா செல்கிறோம்.
வெறும் கட்டிடங்களைப் பார்ப்பது மிகவும் குறைவு...
மலையகங்களுக்குச் செல்வதும்,
நீர் வீழ்சிகளுக்குச் செல்வதும்,
கடற்கரைகளுக்குச் செல்வதும்,
இயற்கையின் இன்ப வனத்தில் நாம் நம்மை மறப்பதற்காகவும் - அது கொடுக்கும் கிளர்ச்சிக்காகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம் - பார்க்கலாம் - அனுபவிக்கலாம்....
அறிவால் இதில் பயனில்லை.


எழுத்தில் திளைப்பவனுக்கும் - கவிஞனுக்கும் அறிவு தேவை என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனாலும் வெறும் அறிவு மட்டுமே ஒருவனை கவிஞனாக்கி விடும் என்பதை எந்த கவிஞனும் சொல்ல மாட்டான்.
கவிஞன் அறிவு கடந்தவன் -
அறிவால் அவ்வளவு பயனில்லை.

ஆனால் அறிவு இல்லையெனில்,
தெரிந்தவன் ஆள்பவனாகவும் தெரியாதவன் அடிமையாகவுக் இருக்க நேரிடும் என்பதை வரலாறு சொல்வதனால் அறிவின் செயல்பாட்டை அடியோடு மறுப்பதற்கும் இல்லை.
ஆனாலும் அறிவால் அனைத்தையும் அறிந்து கொள்ளவும் முடியாது -
வெற்றிடம் இல்லாமல் பேசவும் முடியாது.

உலகத்தின் நோக்கம் 5

சரி தவறு என்றால் அது அறம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகிறது.
அறம் என்பதை நிலை நிறுத்த நோக்கம் இல்லையென்றால் அது தேவை என்று சொல்வதும் கடினம்.

ஆனாலும் நமக்காகத் தான் நாம் அதை உருவாக்கிக் கொள்கிறோம் - என்றால் அதை மிகவும் மென்மையாகவே வலியுறுத்த முடியும்.

எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அப்படியெனில் பெரும்பான்மையின் அடிப்படியிலும் சரி தவறு என்பதை நிர்ணயம் சித்துவிட முடியாது. மெயன்ஸ்ட்ரீமுக்குள் வராத மக்களின் விருப்பமும், வாழும் வழி வகைகளும் தவறு என்றும் சொல்லிவிட முடியாது.

ஏனெனில் அவர்களும் மனிதர்கள் என்ற அளவிலாவது அவர்களின் விருப்பமும் சரியாகிறது. எந்த ஒரு தனி மனிதனின் விருப்பத்தையும் தவறு என்பது அதிகார போதையிலிருந்து வருவதாகவே இருக்கும்.

பணம் தான் ஒருவனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்கிற விதத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையைத் தான் எல்லாரும் முன் வைக்க விரும்புகிறார்கள்.
அமெரிக்கா தன் நாடு தன் மக்கள், தன் வாழ்வு என்கிற விதத்தில் எல்லா நாட்டையும் இன்னும் சுரண்டிக் கொண்டிருக்கிறது.

எனில் இயற்கைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை தவறு என்று சொல்லிவிட முடியாது. கரியமில வாயு வெளியிடுவதைக் குறைப்பதற்கு அமெரிக்கா ஒரு போதும் முன்வராது. ஏனெனில் அதன் நிலைப் படி அது அவர்களின் வாழ்வின் வசதி வாய்ப்புகளைப் பாதிக்கும்.

ஏனெனில் எதற்கும் நோக்கம் இல்லாத பொழுது நாம் எதனை முன்னிறுத்தியும் பயனில்லை.
எனவே நோக்கம் இயற்கைக்கும் உண்டு என்கிற கட்டமைப்பில் இறங்க வேண்டுமோ என்பதுதான் மனதுக்குப் படுகிறது.

Thursday, April 8, 2010

உலகத்தின் நோக்கம் 7

நான் ஏதோ எழுத நினைத்து எங்கெங்கேயோ சுற்றித் திரிந்து விட்டேன்.
அது என் தவறே!

உலகத்திற்கு நோக்கம் இருக்கிறதா இல்லையா என்பது பெரிய விவாதங்களை உள்ளடக்கியது.

இக்கட்டுரையின்
மூலம் ஏதாவது ஒன்றை நாம் நிருபித்துவிட முடியும் என்ற எண்ணம் எனக்கு இல்லைஅதில் ஒரு முடிவுக்கும் வர இயலாது.

எந்த ஒரு நிலைப்பாடும் ஏதாவது ஒரு பார்வையிலிருந்து பல்வேறு சிக்கல்களையும், பல கேள்விகளையும் சந்திக்க நேரிடும்.


எல்லாமே interpretations என்கிற விதத்தில்

பல்வேறு சிக்கல்களையும் சந்திக்க நேரும்.

தங்களின் interpretationsபடி அவரவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் ஊன்றியிருக்கிரார்கள்.


அதை சரி என்றோ தவறு என்றோ

திட்டவட்டமாக சொல்வதற்கு நமக்கு முடியாது.


ஆனால் ஒன்றை மட்டும் நாம் சொல்ல முயற்சிக்கலாம்.

நாமாக நோக்கத்தை கண்டுபிடிக்கிறோமோ

அல்லது உண்மைலே இருக்கிறதா என்கிற விவாதம் தேவையற்றது.


நாம் இருக்கிற இந்த இயந்திரத்தனமான உலகத்தில்

நாமும் வேதிப் பொருள்களையும்,

மற்ற உயிரினங்கள் கொண்டிருக்கிற materialsஐயும் கொண்டிருந்தாலும்

ஏதோ ஒருவிதத்தில்

நாம் மேம்பட்டவர்களாகவே இருக்கிறோம்.


இதில் யாரும் மறுப்பதற்கு எதுவும் இருக்காது என்றே நம்புகிறோம்


அவர்கள் materialistsஆக இருந்தாலும் சரி அல்லது Idealists ஆக இருந்தாலும் சரிutilitarianism பேசுகிறவர்களாக இருக்கட்டும் அல்லது, பயன்பாடு நிலையைக் கடந்தவர்களாக இருக்கட்டும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், மனித நம்பிக்கையுள்ளவர்கள்யாராக இருந்தாலும் சரி


மனிதர்கள் மற்ற விலங்குகளைக் காட்டிலும் சற்றே மேலானவர்கள் என்பதை மறுக்க மாட்டார்கள்.


அந்த மேலான குணம் எது என்பதைப் பற்றிய விவாதம் மேலும் பிரிவினையைத்தான் உண்டாக்கும்.


எனவே அந்த விவாதத்தையும் தவிர்த்து விடலாம்.


ஆனால் அந்த மேலான குணம் என்பதுதாவரங்களைக் காட்டிலும், ஆடு மாடுகளைக் காட்டிலும் மேலானது என்றால்ஏதாவது ஒரு விதத்தில் நாம் பயனுள்ளவர்களாக இருப்பதே சரி என்று படுகிறது.


அதில் முதன்மையானதுமரம் பயனுள்ளதைப் போல (அதற்கு நோக்கம் என்று ஒன்று இல்லாவிட்டால் கூட), விலங்குகள், பயனுள்ளதைப் போலநாம் பயனுள்ளவர்களாக இருப்பதுதான்.


இயற்கை விதிகளின் படி நமது கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ளாத விதிகள் அல்லது

அதற்கு அப்பாற்பட்ட புதிய டெக்னாலஜி என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்.

அப்படிப்பட்ட இவ்வுலகத்தை நாம் அதன் போக்கிலேயே அழிய விடுவோம்.


அதற்கு நாம் உதவி செய்ய வேண்டியதில்லை. அதுவாய் அழிந்து போகட்டும்.


நாம் வாழ்வதற்கு உகந்ததாய் இருந்த இவ்வுலகம் இன்னும் பல தலைமுறைகளைக் காணட்டும். அதற்கு நாம் பெரிதாய் ஒன்றும் செய்யாவிட்டாலும்அதை அழிவுக்கு உட்படுத்தும் செயல்களைச் செய்யாமலே இருக்கலாம் என்பதுதான்.


பல கோடிக் கணக்கான ஆண்டுகளாய் ஏறக்குறைய சரியாய் இருந்த இந்த உலகத்தை மிக விரைவாய் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவியலாளர்களும் நமக்குச் சொல்கிறார்கள்.

Global Warming - ஐ நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மிக வேகமாய் பூமி சூடாகி வருகிறது

அதற்கு modern (நவீன )மனிதர்களாகிய நாம்தான் காரணம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


நம் தந்தை கடன் வாங்கினால் அதை நாம் அடைப்பது போல, பிறர் செய்த தவறுகளுக்கும் நாமே பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.


ஊரை எல்லாம் பயன்படுத்திய ஐரோப்பிய நாடுகள் செய்த தவறுகளின் விளைவை நாமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். என்ன செய்வது? பாதிப்பு என்பது அனைவருக்கும்தான்.


மரங்கள் இருப்பது நல்லது. இயற்கை சக்தியை விரயமாக்காமல் பயன்படுத்துவதுமக்கள் பரந்து விரிந்து வாழ்வது

விளை நிலங்கள் விளைநிலங்களாகவே இருக்க விடுவது

ஒவ்வொரு கிராமத்தையும் நகரத்தையும் முன்பு இருந்தது போல self-sufficient ஆக இருக்க வைப்பது

இன்னும் இவைகளைப் போல என்ன செய்யலாம் என்பதை

அரசுகளும் நாமும் தான் தொடர்ந்து யோசிக்க வேண்டும்.


நமது சிறு செயல்களால், இன்னும் ஒரு ஆண்டாவது இந்த பூமி கூட வாழும் என்றால் அதுவே நாம் நமக்கு முன்பு மாசு படாமல் இந்த உலகை நமக்கு விட்டுச் சென்றவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்

நாம் வாழ நம்மை அனுமதிக்கும் (தெரியாமல்தான்)

இந்த உலகத்திற்கு செலுத்தும் மரியாதை.


இல்லையென்றால், நம் உலகைத் தூய்மைப் படுத்தி நமக்கு உணவைக் கொடுக்கும் மரங்களை விட நாம் கீழானவர்கள் தான்.

மண்ணை விடக் கேவலமானவர்கள்தான்.


நமக்குப் பின் மண்ணும் மரமும் இருக்கும்

நாம்தான் மாய்ந்து போவோம்.

எப்படி இருந்தாலும் மாய்ந்து போகும் நாம்

நல்லதை செய்து மாயலாமேமாயமாகலாமே!


ஏன் என்று கேட்பவர்கள் - முதல் கட்டுரையைப் படிக்கவும்.