Tuesday, March 23, 2010

மாசு படும் நீர் - ஆபத்து

ஐ. நா. பொதுச் செயலாளரின் செய்தி.

பின் வரும் வலையிலிருந்து எடுக்கப்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2010/03/23/polluted-water-kills-more-people.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+oneindia-thatstamil-all+%28Oneindia+-+thatsTamil%௨௯


நைரோபி: உலகில் போரால் ஏற்படும் உயிரிழப்புகளை விட மிக அதிக அளவிலான உயிர்களைப் பறித்து வருகிறது மாசடைந்த குடிநீர் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார்.

பாதுகாக்கப்படாத, அசுத்தமான, மாசடைந்த குடிநீரைக் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை, போரினால் ஏற்படும் உயிரிழப்பை விட அதிக அளவில் இருப்பதாக மூன் கவலை தெரிவித்துள்ளார்.

நைரோபியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மனித குலத்தை வேகமாக அழித்து வரும் மாபெரும் ஆயுதமாக மாறி நிற்கிறது மாசடைந்த குடிநீர். இது போரினால் ஏற்படும் உயிரிழப்பை விட அதிக அளவிலான உயிர்களைப் பறித்து வருகிறது.

புவிவெப்ப மாற்றம் காரணமாக சுகாதாரமான குடிநீர் கிடைப்பது அரிதாகி வருகிறது. அசுத்தமான மாசு படிந்த நீரைக் குடிப்பதால் பல்வேறு வியாதிகளுக்கு உலக மக்கள் ஆளாக நேரிடுகிறது. இது உயிரிழப்பில் போய் முடிகிறது.

குடிநீர்ப் பற்றாக்குறை, அசுத்தமான குடிநீர் ஆகியவற்றால் முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை மக்கள்தான். இந்த அவல நிலைக்கு முடிவு கட்ட வேண்டியது அவசியம் என்றார் மூன்.

உலக தண்ணீர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மேற்கண்டவாறு பேசினார் பான் கி மூன்.

Monday, March 22, 2010

மார்ச் 22 - உலக தண்ணீர் தினம்

உலகத்தின் உயிர் மூச்சாக இருப்பது தண்ணீர்.

நீரின்று அமையாது உலகு -

எல்லாம் எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் யாரும் அதைக் காப்பதற்கான வழிகளை கடைப் பிடிப்பதாகத் தெரியவில்லை.

தண்ணீர் பற்றாக்குறை எதனால் ஏற்படுகிறது?
மக்கள் தொகைப் பெருக்கமா?
அது சும்மா.

அது கையாலாகாத அரசுகள் சொல்லும் விளக்கம்.

சில பொருளாதார வல்லுனர்களும் சொல்கிறார்கள் - அவர்களுக்கான் பதிலை வேறு சில நிபுணர்கள் சொல்லுவதால் நமக்கு எதற்கு அந்த வேலை.

சென்னை - யில், மும்பையில், பெங்களூருவில் என்று எல்லா பெரிய நகரங்களிலும் பற்றாக்குறை.

மக்கள் ஒரு சில இடங்களிலே வந்து குவிவதற்கு யார் காரணம்...
ஒரு சில நகரங்களில் மட்டும் வேலைக்கான வாய்ப்புகள் பெருகும் பொது மக்கள் அங்கேதான் வருவார்கள்.

இருக்கிற இடங்களிலே வேலைக்கான் வாய்ப்பையும், நகரங்களில் கிடைக்கிற வசதிகள் எல்லா இடங்களிலும் கிடைக்கும்படி செய்யாமல், சென்னையை நோக்கி மக்கள் வருகிறார்கள் என்றால் யார் தவறு?

சென்னையைத்தான் தொழில் அதிபர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று சொல்லலாம். சென்னையில் மட்டும் சாலை வசதி இருந்தால், சென்னை மட்டுமே அனைத்து வசதிகளையும் பெற்றிருந்தால் என்ன செய்வார்கள்.


தமிழக அரசுதான் சிவப்புக் கம்பளம் விரித்து சென்னைக்கு வரவேற்கிறதே?

செம்பரம்பாக்கம் நீருற்றி - லிருந்து யார் நீரை உறிஞ்சு எடுக்கிறார்கள். நீங்களே வரவேற்று, நீரை உறிஞ்சும் அதிகாரத்தைக் கொடுத்து - எத்தனை பேருக்கு அதனால் பயன்....
அரசை ஏமாற்றுகிறார்கள், தொழிலாளர்களை ஏமாற்றுகிறார்கள்..

வருகிற தொழில் நிருவனஞளை தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பிரித்து விடுங்கள்... சாலைகளை இணையுங்கள்..

அதை விட்டுட்டு ...


நிலத்தடி நீரை உறிஞ்சும் நிலையை மாற்ற வேண்டும்....

மழைக் காலங்களில் நீரை சேமிக்கும் பழக்கம் நமக்கு உருவாக வேண்டும்.
ஒவ்வொரு கிராமங்களிலும் இருந்த குளம், குட்டைகள், கண்மாய், ஏரி, இவைகளெல்லாம் மீண்டும் உருவாக்கப் பட வேண்டும்.

மழை குறைந்து விட்டது.

ஏன் குறைந்தது?
மரங்கள் இல்லை...

நாம் யோசிக்க வேண்டியது நிறைய இருக்கின்றது.

குடிக்கத் தண்ணீர் இல்லை என்கிற போதுதான் நாம் யோசிப்போம்..

அதுவரை என்ன செய்யலாம்....

தேவையில்லாமல் தண்ணீரை விரயம் செய்யலாம்..

Sunday, March 21, 2010

No to Plactics

Plastic Bag Pollution - Eco friendly Cotton Canvas Bags-EcoTrendbags
View more presentations from skpurohit.

Saturday, March 20, 2010

நல்வரவு

இது நம் உலகம். நீங்களும் நானும் வாழும் உலகம்.

இதில் நீங்களும் நானும் வந்து போகிறவர்கள். வந்து போகிறவர்கள் யாரும் இந்த உலகை சொந்தம் கொண்டாட முடியாது.

ஆனால், நாம் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறோம்?
இதை ஏதோ நாம் உருவாகியது போலவும், நமக்கு பிறகு இது தேவையில்லை என்பது போலவும், போட்டி போட்டுக்கொண்டு அழித்துக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு முன் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்தார்கள்.
நாம் வாழ இந்த உலகை அழகாய் விட்டுச் சென்றார்கள்.

நமக்குப் பின் கோடிக்கணக்கான மக்கள் வருவார்கள்.
அவர்களுக்கு இந்த உலகை நாம் அழகாய், வாழும்படி விட்டுச் செல்ல வேண்டாமா?

நாகரீகத்தில் (!) வளராமல் இருந்த மக்களுக்குஇருந்த அக்கறை,
இவ்வளவு வசதிகளுக்குப் பிறகும் நம்மிடம் இல்லையே?

இது நாம் வாழும் பூமி. நாம்தான் காக்க வேண்டும்.