இது விளம்பரம்தான்.
ஆனாலும் நமக்குத் தேவையானதுதான்...
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
எல்லாமே interpretations என்கிற விதத்தில்
பல்வேறு சிக்கல்களையும் சந்திக்க நேரும்.
தங்களின் interpretations – படி அவரவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் ஊன்றியிருக்கிரார்கள்.
அதை சரி என்றோ தவறு என்றோ
திட்டவட்டமாக சொல்வதற்கு நமக்கு முடியாது.
ஆனால் ஒன்றை மட்டும் நாம் சொல்ல முயற்சிக்கலாம்.
நாமாக நோக்கத்தை கண்டுபிடிக்கிறோமோ
அல்லது உண்மைலே இருக்கிறதா என்கிற விவாதம் தேவையற்றது.
நாம் இருக்கிற இந்த இயந்திரத்தனமான உலகத்தில் –
நாமும் வேதிப் பொருள்களையும்,
மற்ற உயிரினங்கள் கொண்டிருக்கிற materials – ஐயும் கொண்டிருந்தாலும் –
ஏதோ ஒருவிதத்தில்
நாம் மேம்பட்டவர்களாகவே இருக்கிறோம்.
இதில் யாரும் மறுப்பதற்கு எதுவும் இருக்காது என்றே நம்புகிறோம் –
அவர்கள் materialists – ஆக இருந்தாலும் சரி அல்லது Idealists ஆக இருந்தாலும் சரி – utilitarianism பேசுகிறவர்களாக இருக்கட்டும் அல்லது, பயன்பாடு நிலையைக் கடந்தவர்களாக இருக்கட்டும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், மனித நம்பிக்கையுள்ளவர்கள் – யாராக இருந்தாலும் சரி –
மனிதர்கள் மற்ற விலங்குகளைக் காட்டிலும் சற்றே மேலானவர்கள் என்பதை மறுக்க மாட்டார்கள்.
அந்த மேலான குணம் எது என்பதைப் பற்றிய விவாதம் மேலும் பிரிவினையைத்தான் உண்டாக்கும்.
எனவே அந்த விவாதத்தையும் தவிர்த்து விடலாம்.
ஆனால் அந்த மேலான குணம் என்பது – தாவரங்களைக் காட்டிலும், ஆடு மாடுகளைக் காட்டிலும் மேலானது என்றால் – ஏதாவது ஒரு விதத்தில் நாம் பயனுள்ளவர்களாக இருப்பதே சரி என்று படுகிறது.
அதில் முதன்மையானது – மரம் பயனுள்ளதைப் போல (அதற்கு நோக்கம் என்று ஒன்று இல்லாவிட்டால் கூட), விலங்குகள், பயனுள்ளதைப் போல – நாம் பயனுள்ளவர்களாக இருப்பதுதான்.
இயற்கை விதிகளின் படி நமது கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ளாத விதிகள் அல்லது
அதற்கு அப்பாற்பட்ட புதிய டெக்னாலஜி என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்.
அப்படிப்பட்ட இவ்வுலகத்தை நாம் அதன் போக்கிலேயே அழிய விடுவோம்.
அதற்கு நாம் உதவி செய்ய வேண்டியதில்லை. அதுவாய் அழிந்து போகட்டும்.
நாம் வாழ்வதற்கு உகந்ததாய் இருந்த இவ்வுலகம் இன்னும் பல தலைமுறைகளைக் காணட்டும். அதற்கு நாம் பெரிதாய் ஒன்றும் செய்யாவிட்டாலும் – அதை அழிவுக்கு உட்படுத்தும் செயல்களைச் செய்யாமலே இருக்கலாம் என்பதுதான்.
பல கோடிக் கணக்கான ஆண்டுகளாய் ஏறக்குறைய சரியாய் இருந்த இந்த உலகத்தை மிக விரைவாய் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவியலாளர்களும் நமக்குச் சொல்கிறார்கள்.
Global Warming - ஐ நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மிக வேகமாய் பூமி சூடாகி வருகிறது –
அதற்கு modern (நவீன )மனிதர்களாகிய நாம்தான் காரணம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நம் தந்தை கடன் வாங்கினால் அதை நாம் அடைப்பது போல, பிறர் செய்த தவறுகளுக்கும் நாமே பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஊரை எல்லாம் பயன்படுத்திய ஐரோப்பிய நாடுகள் செய்த தவறுகளின் விளைவை நாமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். என்ன செய்வது? – பாதிப்பு என்பது அனைவருக்கும்தான்.
மரங்கள் இருப்பது நல்லது. இயற்கை சக்தியை விரயமாக்காமல் பயன்படுத்துவது – மக்கள் பரந்து விரிந்து வாழ்வது –
விளை நிலங்கள் விளைநிலங்களாகவே இருக்க விடுவது –
ஒவ்வொரு கிராமத்தையும் நகரத்தையும் முன்பு இருந்தது போல self-sufficient ஆக இருக்க வைப்பது –
இன்னும் இவைகளைப் போல என்ன செய்யலாம் என்பதை
அரசுகளும் நாமும் தான் தொடர்ந்து யோசிக்க வேண்டும்.
நமது சிறு செயல்களால், இன்னும் ஒரு ஆண்டாவது இந்த பூமி கூட வாழும் என்றால் அதுவே நாம் நமக்கு முன்பு மாசு படாமல் இந்த உலகை நமக்கு விட்டுச் சென்றவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் –
நாம் வாழ நம்மை அனுமதிக்கும் (தெரியாமல்தான்)
இந்த உலகத்திற்கு செலுத்தும் மரியாதை.
இல்லையென்றால், நம் உலகைத் தூய்மைப் படுத்தி நமக்கு உணவைக் கொடுக்கும் மரங்களை விட நாம் கீழானவர்கள் தான்.
மண்ணை விடக் கேவலமானவர்கள்தான்.
நமக்குப் பின் மண்ணும் மரமும் இருக்கும் –
நாம்தான் மாய்ந்து போவோம்.
எப்படி இருந்தாலும் மாய்ந்து போகும் நாம்
நல்லதை செய்து மாயலாமே – மாயமாகலாமே!
ஏன் என்று கேட்பவர்கள் - முதல் கட்டுரையைப் படிக்கவும்.
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
நமக்கு நாமே சிலவற்றைக் கற்பித்துக் கொள்வோம்.
சில சரி பல தவறு என்று அர்த்தம் கற்பித்துக் கொள்வோம்.
சிவப்பு விளக்கில் சாலையைக் கடக்கக்கூடாது.
கடந்தால் தவறு என்போம்.
அதற்கு அடுத்த நிலையில் தவறு என்பதைத் தாண்டி –
அதைக் குற்றம் என்போம்.
குற்றத்தைக் கண்காணிக்க காவலர்களை நியமிப்போம்.
நமக்கு நாமே இவைகளை எல்லாம் கற்பித்துக் கொள்வதனால்
நமக்கு முன்னிரிமை தர வேண்டும்:
எனவே நமக்கு உரிமை உண்டு என்பதையும் வலியுறுத்தி,
நாம் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க நீதிமன்றங்களை ஏற்படுத்துவோம்.
உரிமையை நிலை நிறுத்தியது போலவும் ஆச்சு குற்றங்களை குறைத்தது போலவும் ஆச்சு.
பின் என்ன செய்யலாம் - எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவும்,
எல்லாரும் சமமாக மதிக்கப் படவும் வேண்டி அரசுகளை ஏற்படுத்துவோம் அல்லது அரசுகளின் வழி காவல்துறையையும் நீதிமன்றங்களையும் ஏற்படுத்துவோம்..
நாம் தனி மனிதர்கள் தான் ஆனாலும் நாம் விலங்குகளிலிருந்து மாறுபட்டு வாழ நாம் இந்த சமுதாய வாழ்க்கை முறைக்குள் ஒப்பந்தம் செய்து கொள்வோம்.
இதைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை.
நான் நன்றாக இருக்க வேண்டும்.
அதற்காக இவைகளை உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
அவ்வளவுதான் - இந்த உலகம் என்பது ஒன்றுமில்லாதது -
அதை நான் படைத்துக் கொள்கிறேன்.
சிக்கல்கள் -
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் - எது சரி தவறு என்பதை யார் நிர்ணயம் செய்வது?
எதனடிப் படையில் நிர்ணயம் செய்வது?
சரி தவறு என்பதை நமக்குள்ளேயே தேடுவோம். இயற்கை நமக்கு கொடுத்திருக்கிற வரத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்வோம்.
மகிழ்ச்சி நமது வாழ்க்கைக்குத் தேவை - எனவே அதன் அடிப்படையில் சரி தவறை நிர்ணயம் செய்வோம்.
இதிலும் சிக்கல் என்னவென்றால் -
குறிப்பிட்ட ஒன்றுதான் எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக மகிச்சியைக் கொடுக்கும் என்று சொல்லிவிட முடியாது.
எனக்கு எது இன்பம் தருமோ அது உங்களுக்கு இன்பம் தராது.
அப்ப எப்படி எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக இது சரி தவறு என்று சொல்வது?
பெரும்பான்மையான மக்களுக்கு எது இன்பம் தருமோ அதை சரி என்போம்.
மற்றதை தவறு என்போம்.
ஆனால் நாம் தனி மனித உரிமையையும் வலியுறுத்துகிறோம்.
எனவே எனக்கு ஒரு பெண்ணோடு வாழ்வது இன்பம் தரவில்லை பல பெண்களோடு வாழ வேண்டும் என்றால் அதைத் தவறு என்றோ மனித நோக்கத்திற்கு எதிரானது என்றோ சொல்லிவிட முடியாது - ஏனெனில் நோக்கத்தை நாம்தான் படைத்தோம் ஆனால் - உரிமையை நிலை நிறுத்தவும் வேண்டும்.
அல்லது தனது வாழ்க்கையை தானே முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஒருவன் முடிவு செய்தால் - அதுதான் இன்பம் என்றால் என்ன செய்வது -
ஒரு ஆண் இன்னொரு ஆணோடு வாழ்வதுதான் எனக்கு மகிழ்ச்சி என்றால் அதைத் தவறு என்றும் சொல்ல முடியாது.
எந்த நோக்கத்தை வைத்து அதைத் தவறு என்று சொல்ல முடியும்?
முடியாது.
அப்ப அதையும் சரி என்போம்.
ஒட்டு மொத்தமாக எல்லாரையும் வெடி வைத்துக் கொள்வதுதான் எனக்கு இன்பம் என்றால் - அதுவும் தவறா?
கவன ஈர்ப்புக்காகவும் எங்களது கோரிக்கைகளை சரி என்று என்றுக் கொள்ளவும் இப்படித்தான் செய்தாக வேண்டியிருக்கிறது என்றால் அதுவும் சரிதானே?
அப்ப இப்படி மாற்றி வைத்துக் கொள்வோம் -
மனித குலத்தை அழிக்கும் அனைத்தையும் தீவிரவாதம் என்றும், தவறு என்றும் சொல்லி அதை மிகப் பெரிய குற்றம் என்போம்.
மனித குலத்தை அழிப்பதா?
திருமணம் என்பது ஒரு நிறுவனம் - நாம் ஏற்படுத்தியது.
ஓரினத்திருமணம் சரி - அதுவும் நாம் ஏற்படுத்தியது -
abortin செய்வதும் சரி.
ஏனெனில் அது தனி மனித உரிமை.
மரங்களை அழிப்பதும் சரி - ஏனெனில் அதுவும் நாம் இன்பமாக வாழ செய்கிறோம்.
கரியமில வாயுவை அளவுக்கு அதிகமாக வெளிப் படுத்தி வெப்பத்தை அதிகரித்துக் கொண்டோம்.
என்றாவது இப்படித்தான் ஆகும் அதனால் அது தவறில்லை என்கிறோம்.
இது தொடர்ந்து நடந்தால் உலகமே இருக்காதே அப்புறம் எப்படி மனித குலம் இருக்கும்.
இதெல்லாம் நமக்குச் சரியெனப் படுகிறதா?
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||